பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தமது
தோழர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்த பொழுது வயது முதிர்ந்த பெண்மணியொருவர் வந்து
திராட்சைப் பழக்குலையொன்றை அன்பளிப்பாக கொடுத்தார்கள். அண்னலவர்கள் அந்த பழங்களைப்
புசிக்கலானார்கல். தனது தோழர்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் அத்தனைப் பழங்களையும்
வழக்கத்திற்கு மாறாக பெருமானார்(ஸல்) அவர்கள் தனியாக உண்டது தோழர்களுக்கு வியப்பாக
இருந்தது. அப்பெண்மணியோ அப்பழங்கள் அத்தனையும் பெருமானாரே சாப்பிட்டதில் அளவற்ற
மகிழ்ச்சி கொண்டு வீடு சென்று விட்டார்.
பின்னர் தோழர்கள் பெருமானாரை நோக்கி தாங்கள்
எந்த அன்பளிப்புப் பொருட்கள் வந்தாலும் எமக்கு பகிர்ந்து கொடுப்பீர்களே இன்று
மட்டும் ஏன் வித்தியாசம்? என வினவினார். அண்ணலார்கள் புன்
முறுவலுடன் அந்த மாது கொண்டுவந்த பழங்கள் அனைத்தும் புளிப்பாக இருந்தன. உங்களுக்கு
நான் அதைக் கொடுத்தால் சாப்பிட்டு விட்டு பழங்கள் புளிக்கின்றன என்று சொல்வீர்கள்.
அப்போது அப் பெண்ணின் மனம் வேதனைப்படும்
அப்பழங்களை
அன்பளிப்புச் செய்த அந்த அம்மையாரின் மனதைப் புண்படுத்த நான் விரும்ம்பவில்லை.
எனவே தான் எல்லாப் பழங்களையும் நானே புசித்தேன். என நவின்றார்கள் எவர் மனதையும்
நோகச் செய்ய விரும்பாத அண்ணலெம் பெருமானவர்கள்.
நபிகளாரின் இந்த குணத்தை நாமும் பின் பற்ற முயல
வேண்டும் (இன்ஷா அல்லாஹ்)
0 Comments