பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து “யாரசூலுல்லாஹ்
எனது குடும்பம் வறுமையால் வாடுகிறது. எனக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள்” என யாசகம்
கேட்டு நின்றார்கள்
அதற்கு பெருமானார்(ஸல்) அவர்கள் “உமது வீட்டில்
ஏதாவது பொருட்கள் இருக்கின்றனவா?” என வினவினார்கள்.
அம்மனிதரோ “ தண்ணீர் அருந்துவதற்கான
பாத்திரமொன்றும் போர்வையும் தான் இருக்கின்றன” என்றார்
அண்ணலார் அப்பொருட்களை எடுத்து வரச் சொல்லி தனது
தோழர் மத்தியில் அப்பொருளை ஏலம் விட்டார்கள். நபித்தோழர் ஒருவர் அதை வாங்கி பணத்தை
பெருமானாரிடம் கொடுக்கவே அவர்கள் அதை அந்த ஏழையில் கையில் கொடுத்து “இந்த பணத்தில்
பாதியை உனது உணவுத்தேவைக்காக உபயோகப்படுத்து, எஞ்சிய பணத்திற்கு கடைத்
தெருவுக்குப் போய் கோடாரி ஒன்று வாங்கி காட்டுக்குப் போய் விறகு வெட்டி விற்று
உனது வாழ்க்கையை நடத்து. அல்லாஹ் உனக்கு அருள் புரிவான்” என்று உபதேசித்து,
பிறரிடம் யாசிக்காமல் உழைத்து உண்ணும் வழியை பெருமானார் அந்த ஏழைக்கு
உணர்த்தினார்கள். அந்த மனிதரும் அன்று முதல் யாசிப்பதை விட்டு உழைப்பால் உயர்வு
பெற்றார்.

0 Comments