ஞானமகான்
அப்துல் காதிர் ஜீலான்(ரஹ்) அவர்கள் சிறுவதினராய் இருந்த போது அன்னாரை மார்க்கக்
கல்வி கற்பதற்காக தாயார் வெளியூருக்கு அனுப்பினார். செலவுக்காக நாற்பது
பொற்காசுகளையும் கொடுத்தனிப்ப்பினார்.
தனது மகன் காட்டு வழியில் பயணம் செய்ய
வேண்டியிருப்பதனால் வழிப்பறிக் கொள்ளையர்களின் அட்டகாசம் அவ்வேளை மிகுதியாக
இருந்ததாலும் தாயார் பொற்காசுகளை மகனின் உடையில் கைகளின் கீழே அக்குள் பகுதியில்
வைத்து பணம் இருப்பதே யாருக்கும் தெரியாத மாதிரி தைத்து அனுப்பினார். அத்தோடு
உயிரே போகும் நிலை ஏற்பட்டாலும் பொய் பேசாதே. என உபதேசம் செய்து அனுப்பினார்.
ஒரு
சில பயணிகளோடு அப்துல் காதிர் ஜீலான்(ரஹ்) அவர்களும் பயணப்பட்டார்கள். சில
நாட்களின் பயனத்திற்கு பிறகு காட்டின் வழியே பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
அவர்கள் பயந்தது போல் கொள்ளையர்கள் அடங்கிய கூட்டம் அவர்களை முற்றுகையிட்டது.
ஒவ்வோருவரையாக நெருங்கி அவர்களின் பொருளை மிரட்டி வாங்கிக்கொண்டனர். அப்துல்
காதிர் ஜீலான்(ரஹ்) அவர்களை பார்த்த கொள்ளையர் தலைவன். சிறுவன் இவனிடன் என்ன
இருக்க போகிறது என என்னி விட்டுவிட்டான். கடைசியாக அனைத்து பொருள்களையும்
மிரட்டி பறித்த கொள்ளையர்கள்.
“கடைசியாக கேட்கிறேன், யாரிடமாவது ஏதேனும் பணம் பொருள் உள்ளதா? உண்மையை கூறுவிடுங்கள்இல்லையேல் நடப்பதே வேறு”
என மிரட்டினான். இதை கேட்ட அப்துல் காதிர்
ஜீலான்(ரஹ்) அவர்கள் எந்தவித பதற்றமும் இல்லாதவராக, தானாக முன்வந்து என்னிடம் நாற்பது பொற்காசுகள் உள்ளன என
கூறினார்கள்,
அதற்கு கொள்ளையன், “என்ன!! உன்னிடன் நாற்பது பொற்காசுகளா?”
என வியப்பாக கேட்டான்.
உடனே தனது அக்குள் பகுதியில் தைக்கப்பட்ட பகுதியை கிழித்து
நாற்பது பொற்காசுகளை கொள்ளையனிடன் காட்டினார்கள். இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த
அந்த கொள்ளையர் தலைவன். “ நீ நினைத்திருந்தால் இதனை இல்லை என பொய் கூறி
தப்பித்திருக்காலாமே. நீ ஏன் அவ்வாறு செய்யவில்லை என. ஆச்சரியத்தோடு வினவினான்.
அதற்கு அப்துல் காதிர் ஜீலான்(ரஹ்) அவர்கள், ‘‘இல்லை, உயிரே போகும் நிலை
ஏற்பட்டாலும் பொய் கூறக்கூடாதென என் தாயார் உபதேசம் கூறியுள்ளார்” அதனால் நான்
பொய் பேச மாட்டேன் என கூறினார்கள்.
இதனை கேட்டு இன்னும் ஆச்சரியம் அடைந்த கொள்ளையர் தலைவன்.
வேறு என்ன உன் தாயான் உபதேசம் கூறினார் என மிகுந்த ஆச்சரியத்தேடு கேட்டான். அதற்கு
அப்துல் காதிர் ஜீலான்(ரஹ்) அவர்கள். எக் காரணம் கொண்டும் பிறர் பொருளை
திருடக்கூடாதென” அறிவுரை கூறினார் என்றான்.
இதனை கேட்ட கொள்ளையர் தலைவன் வெட்கப்பட்டவனாக. தான் அந்த பயணக்கூட்டத்தாரிடம்
கொள்ளையடித்தையெல்லாம். திரும்ப அவர்களிடமே ஒப்படைத்து விட்டு. இஸ்லாத்தை ஏற்று
திருந்தி வாழ்ந்தான்.
இது முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலான்(ரஹ்) அவர்களின்
வாழ்க்கையில் நடந்த ஒரு ‘கராமத்தாக’ உள்ளது.
**இந்த சம்பவம் தமிழ் துனைபாடப்பகுதியில் நான் சிறுவயதில் படித்தது ஞாபகம் உள்ளது. ஆனால் அதில் அவர்கள் "அப்துல் காதிர்" என்ற முஸ்லிமுக்கு பதிலாக ஒரு சிறுவன் என போட்டிருந்ததும் எனக்கு நினைவிருக்கிறது.
முஸ்லிம்களே ! நாம் நமது வரலாற்றை மறந்து வருகிறோம். மற்றவர்கள் இதனை அவர்களுக்கு ஏதுவாக ஆக்கிக்கொள்கிறார்கள். சற்று உஷாராக இருங்கள்.
அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி
0 Comments