பாலில் நீர் கலக்க மறுத்த மகள்!

பாலில் நீர் கலக்க மறுத்த மகள்!

இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் இஸ்லாமிய வரலாற்றில் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிறது. நீதியின் உறைவிடமான உமர் (ரலி) அவர்கள் இரவு நேரத்தில் மாறு வேடம் பூண்டு நகர்வலம் வருவது வழக்கம். மக்கள் குறைகளை அறிந்து உடன் நிவாரணமளிப்பார்கள்.
                ஒரு முறை கலீஃபா அவர்கள் நகர்வலம் வரும் போது ஒரு வீட்டில் தாயும் மகளும் அளவளாவிக் கொண்டிருப்பது அவர்களின் செவிக்கு எட்டியது. பால் வியாபாரம் செய்து ஜீவனம் நடத்தாட்டும் அந்த ஏழைத்தாய் தன் மகளிடம் இன்றைக்கு வாடிக்கையாளருக்கு பகிர்ந்து கொடுப்பதற்கு பால் பற்றாக்குறை காரணமாக தண்ணீரை பாலில் கலக்குமாறு தனது மகளைப் பணிக்கிறார். மகளோ இது பாவச் செயல் என்று கூறி மறுக்கிறார்.



                அப்போது அந்தத்தாய், “நீ ஏன் பயப்படுகிறாய்? கலிஃபா தான் இங்கு இல்லையே” எனக் கூற மகள் “ உண்மைதான், கலிஃபா இங்கு இல்லாவிடுனும் அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறானல்லவா? அவனுக்கு மறுமையில் பதில் சொல்ல வேண்டுமே” என தாயாரை எச்சரிக்கிறாள். இதைச் செவியுற்ற கலிஃபா அவர்கல் நேர்மையின் சின்னமான அப்பெண்ணை தன் அன்பு மகன் ஆஸிமுக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்கள். இவர்கள் வழித்தோன்றலே இரண்டாம் உமர் என் இஸ்லாமிய உலகம் போற்றும் “உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) அவர்களாவார்

Post a Comment

0 Comments