அன்று
நோன்புப் பெருநாள். மதீனா நகரவீதிகளிலே மக்களின் ஆரவாரம். சிறு பிள்ளைகள் புத்தாடை
பூண்டவர்களாக வீதிகளிலே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த சிறுவர்களின் முகத்திலே மகிழ்ச்சி
பொங்குகிறது. புனித நோன்பை நோற்று முடித்து அதற்குப் பரிசாகக் கிடைத்த புனித ஈகைத்
திருநாளல்லவா இன்று.
இவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாக ஏக்கப்
பெருமூச்சுடன் மேனியெல்லாம் புழுதிபடிந்த நிலையில் தெருவோரத்தில் கண்கள் குளமாக
காட்சியளிக்கின்றான் கந்தலுடையுடன் ஓர் ஏழைச்சிறுவன். அவனை யாரும் கவனித்ததாகத்
தெரியவில்லை.
அவ்வழியே அண்ணலெம் பெருமானார் (ஸல்)
அவர்கல் வருகிறார்கள். அநாதவராக நிற்கும் அந்தச் சிறுவனை காண்கிறார்கள்.
அச்சிறுவனின் தலையை அன்புடன் தடவியவாறே ஏன் அழுகிராய் மகனே! என வினவுகிறார்கள்,
சிறுவனோ, அழுதவனாக எனக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை. இந்த பெருநாள்
தினத்தில் அவர்கள் உயிரோடிருந்தால் என்னை இவ்வாறு அநாதவராக விட்டிருப்பார்களா? என
ஏக்கத்தோடு கூறுகிறான்.
கருணை நபிகளாரின் கண்கள் கலங்குகின்றன.
மகனே! அழாதே நீ இன்று முதல் அநாதையல்ல. நான் உனக்கு அப்பா எனது மனைவி ஆயிஷா உனக்கு
அம்மா! எனக்கூறு அந்தச்சிறுவனை தன் வீடு அழைத்துச் சென்று அவனுக்கு புத்தாடை
அணிவித்து இனிப்பு பண்டங்கள் கொடுத்து மகிழ்விக்கிறார்கள். அந்தச் சிறுவனும் கவலை
மறந்து மற்றச் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடி மகிழ்கிறான். பெருநாள் பரிசாக
கிடைத்த அந்த அனாதைச் சிறுவனை அன்னை ஆயிஷா
(ரலி) அவர்கள். அன்போடு ஏற்றுக்கொள்கிறார்கள்.
0 Comments