நீதியின் முன் அனைவரும் சமம்

ஒரு முறை உயர் குலப் பெண்ணொருத்தி திருட்டுக் குற்றத்திற்காக பெருமானார்(ஸல்) அவர்களின் சமூகத்திற்கு கொண்டு வரப்பட்டாள்.
திருட்டுக் குற்றம் புரிந்தவரின் கையைத் துண்டிப்பது இஸ்லாமிய நீதிமுறை. எனினும் இப்பெண் உயர் குலத்தைச் சேர்ந்தவள் என்பதால் இவளை காப்பாற்றி தண்டனையிலிருந்து விடுதலை செய்ய பலர் முயற்சித்தனர்.
எனவே பெருமானார்(ஸல்) அவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட ஹஸரத் உஸாமா(ரலி) அவர்களின் உதவியை நாடினர்.

இது பற்றி பெருமானாரிடம் எடுத்துரைத்து அப்பெண்ணைக் காப்பாற்றக் கோரினர். உஸாமா(ரலி) அவர்களும் இது பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்களிடன் இதமாக எடுத்துக் கூறினார்கள்.
அதற்கு பெருமானார்(ஸல்) அவர்கள் “உஸாமாவே செல்வந்தர்களுக்கு ஒரு நீதி, வறியவர்களுக்கு ஒரு நீதி என பாரபட்சம் காட்டியதாலே எமது முந்தைய சமுதாயம் அழிந்தொழிந்தது. நீதியின் முன் அனைவரும் சமம். “எனது அன்பு மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவருடைய கையை வெட்ட நான் தயங்க மாட்டேன்.” என்று கூறி அப்பெண்ணுக்கு தண்டனை வழங்கி இஸ்லாமிய நீதியை நிலை நாட்டினார்கள்.
நீதிக்கொரு தலைவர் அன்னல் நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரை பேச வந்த உசாமா(ரலி) வெட்க்கி தலைகுனிந்து பெருமானாரிடம் மன்னிப்பு கோரினார்கள்

Post a Comment

0 Comments