இஸ்லாத்தின் முதற் கலிஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அரச
நிதியிலிருந்து (பைத்துல் மால்) அவர்களுக்கு ஒரு சிறு தொகை உதவிப்பணமாக
வழங்கப்பட்ட்து. இதனைக் கொண்டே அவர்களின் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
ஒரு சமயம் அவரின் அன்பு மனைவியார் தனக்கு இனிப்புப்பண்டம் சாப்பிட ஆசையாக இருப்பதாக கலிஃபா அவர்களிடம் விநயமாக வேண்டி நின்றார்.
தமது அன்றாட வாழ்க்கையை நட்த்துவதற்கே கிடைக்கும் வருவாய் போதாமல் இருக்கும் போது இனிப்புப்பண்டம் செய்ய பணத்திற்கு எங்கே போவது என்ற எண்ணத்துடன் கலிஃபா அவர்கள் பதிலேதும் கூறாமல் மௌளனமாக இருந்து விட்டார்கள்.
சில நாட்களின் பின் அன்னாரின் மனைவியார் இனிப்புப்பண்டங்கள் சில செய்து கலிஃபா அவர்கள் முன்வைத்து உண்ணும்படி வேண்டி நின்றார்கள். கலிஃபா அவர்களோ, உமக்கு இனிப்புப்பண்டம் செய்ய ஏது பணம் என வினவ, மனைவியோ பெருமிதத்துடன், தாங்கள் செலவிற்குத்தரும் பணத்தில் மிச்சம் பிடித்து இதனைச் செய்தேன் என்று கூறினார்கள். உடனே கலிஃபா அவர்கள் அரச நிதிக்காப்பாளருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்.
எனக்கு வழங்கும் சம்பளப் பணத்தில் கணிசமான தொகையை குறைத்து இனிமேல் எனக்கு வழங்கவும். ஏனெனில் எனது அத்தியாவசிய தேவைக்கு மேலதிகமாக அரச நிதியிலிருந்து பணம் பெற நான் விரும்பவில்லை.
சுபஹானல்லாஹ் என்னே! அண்ணாரின் நேர்மை!!
வாழ்வில் எளிமையும் நேர்மையும் நாமும் கடைபிடிக்க வேண்டும்
ஒரு சமயம் அவரின் அன்பு மனைவியார் தனக்கு இனிப்புப்பண்டம் சாப்பிட ஆசையாக இருப்பதாக கலிஃபா அவர்களிடம் விநயமாக வேண்டி நின்றார்.
தமது அன்றாட வாழ்க்கையை நட்த்துவதற்கே கிடைக்கும் வருவாய் போதாமல் இருக்கும் போது இனிப்புப்பண்டம் செய்ய பணத்திற்கு எங்கே போவது என்ற எண்ணத்துடன் கலிஃபா அவர்கள் பதிலேதும் கூறாமல் மௌளனமாக இருந்து விட்டார்கள்.
சில நாட்களின் பின் அன்னாரின் மனைவியார் இனிப்புப்பண்டங்கள் சில செய்து கலிஃபா அவர்கள் முன்வைத்து உண்ணும்படி வேண்டி நின்றார்கள். கலிஃபா அவர்களோ, உமக்கு இனிப்புப்பண்டம் செய்ய ஏது பணம் என வினவ, மனைவியோ பெருமிதத்துடன், தாங்கள் செலவிற்குத்தரும் பணத்தில் மிச்சம் பிடித்து இதனைச் செய்தேன் என்று கூறினார்கள். உடனே கலிஃபா அவர்கள் அரச நிதிக்காப்பாளருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்.
எனக்கு வழங்கும் சம்பளப் பணத்தில் கணிசமான தொகையை குறைத்து இனிமேல் எனக்கு வழங்கவும். ஏனெனில் எனது அத்தியாவசிய தேவைக்கு மேலதிகமாக அரச நிதியிலிருந்து பணம் பெற நான் விரும்பவில்லை.
சுபஹானல்லாஹ் என்னே! அண்ணாரின் நேர்மை!!
வாழ்வில் எளிமையும் நேர்மையும் நாமும் கடைபிடிக்க வேண்டும்
0 Comments