ஈன்ற தாயில் கடனுக்கு எது ஈடாகும்

ஒரு முறை ஒரு மனிதர் தனது வயது முதிர்ந்த தாயை தோளில் சுமந்தவாறே புனித கஃபாவை வலம் வந்து கொண்டிருந்தார். அதனை கண்ட ஒரு பெரியார் ஒருவர் அம்மனிதரை நோக்கி இது யார்? உனது தாயென்று நினைக்கின்றேன் என்றார்.
Mother's day

அதற்கு அம்மனிதர் ஆம் இது என் தாயார் தான். கடந்த பல வருடங்களாக இவ்வாறு எது தாயைத் தோளில் சுமந்து எல்லா இடங்களுக்கும் செல்கிறேன் என்று கூறி நான் என் தாயாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றியவனாக ஆகிவிட்டேனா? என அந்த பெரியாரிடன் வினவினார்.
அதற்கு அப்பெரியார் நீர் ஆயிரம் வருடங்கள் உலகில் வாழ்ந்து உனது ஆயுள் முழுவது உனது தாயைச் சுமந்து திரிந்தாலும் உன்னை உனது தாய் அவரின் கர்ப்பத்தில் ஓரிரவு சுமந்ததற்கு சமமாகாது. அத்தோடு அவளின் மார்பிலிருந்து நீர் ஒரு முறை குடிந்த பாலுக்கு இதனை விட மேலான பணிவிடைகளைச் செய்தாலும் கூட சமமாகாது எனக் கூறினார்
அம்மனிதர் அழுதவராக அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார்.

“இதனாலேயே அண்ணல் நபிகள், உனது தாயில் காலடியில் கீழ் தான் சுவர்க்கமிருக்கிறது என நவின்றார்கள்.”

Post a Comment

0 Comments