ஒரு நாள் பெருமானார் (ஸல்) அவர்களின்
திருச்சமூகத்திற்கு ஒருவர் தனது சிறு வயது மகனைக் கூட்டிக்கொண்டு வந்து
அல்லாஹ்வின் தூதரே! இவன் அதிகமாக இனிப்புச் சாப்பிடுகிறான். இனிப்பு
அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது உடம்புக்கு ஆகாதென இவனுக்கு புத்திமதி கூறுங்கள் என
வேண்டி நின்றார்.
பெருமானாரோ இன்று போய் நாளை வாருங்கள் என அந்த
நபரை அனுப்பிவைத்தார்கள்.
இரண்டாம் நாளும் அவ்வாறே அவர்களை திருப்பி
அனுப்பிவிட்டு ,மூன்றாம் நாள் அவர்கள் வந்ததும், மகனே! இனிப்பு அதிகமாகச்
சாப்பிடுவது உடம்புக்கு கேடுவிளைவிக்கும் எனவே இனிப்பு சாப்பிடுவதை குறைத்துக்
கொள். என அந்த சிறுவனுக்கு புத்திமதி கூறினார்கள்.
அப்போது அச்சிறுவனின் தந்தை நாயகமே! இதை நீங்கள்
முதல் நாளே சொல்லியிருக்கலாமே, இதற்காக நாம் மூன்று நாள் வந்து விட்டோம் எனக்
கூறினார்.
பெருமானார் (ஸல்) அவர்கல் புன்முறுவலுடன், ஆம்
உண்மைதான். நானும் இனிப்பை விரும்பி சாப்பிடுகிறேன். முதலில் நான் அதை
கட்டுப்படுத்திய பின்னரல்லவா பிறருக்கு உபதேசம் செய்யவேண்டும் அதனால் தான்
இத்தனைச் தாமதம், மன்னியுங்கள் என்றார்கள் மாநபி(ஸல்) அவர்கள்.
(** இது நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமாகும்.இந்தியாவின் தேசந்தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியடிகள். சுதந்திர போராட்டத்திற்காக சிறை சென்றபோது, மாநபியின் வரலாற்றை படித்து மற்றும் கேட்டுத்தெரிந்து கொண்டார்கள்.. இதே போன்ற ஒரு சம்பவத்தினை காந்தி அடிகள் தனது வாழ்நாளில் நடத்திக் காட்டினார்கள். காந்தியடிகளின் இந்த சம்பவம் மிகவும் பிரசித்தி பெற்றது.)
0 Comments