ஒரு பூனைக்குட்டிக்கு இரங்கியதற்காக

இறை நேசர் ஷிப்லி(ரஹ்) அவர்கள் மரணித்ததும் அவரின் சீடர்களில் ஒருவர் அன்னாரை கனவில் கண்டார். சுவர்க்கலோகத்தில் மகிழ்ச்சியாக அழகான ஆடை அலங்காரத்துடன் அவர் காணப்பட்டார்.


உங்கள் வெற்றிக்கு காரணமென்ன? என சீடர் அவரிடம் வினவவே அவர் எனது வணக்கத்தின் காரணமாக எனக்கு இந்த உயர் பதவிகை அளித்து அல்லாஹ் என்னை மன்னித்தான் என நினைத்தேன். ஆனால் இதற்குக் காரனம் எனது ஒரு சிறிய நற்செயலே என அன்னார் விளக்கமளித்தார்.
ஒரு நாள் நான் பாக்தாத் நகர தெருவழியே சென்று கொண்டிருந்தேன். கடுங்குளிர்காலம் குளிர் தாங்க முடியாது ஒரு சிறிய பூனைக்குட்டி நடுங்கிக் கொண்டிருந்த்து. அதன் மேல் இரக்கங்கொண்ட நான் அதன் குளிரைப் போக்குவதற்காக அதனை என் போர்வைக்குள் வைத்துக் கொண்டேன். அந்தப் பூனைக்குட்டிக்கு இரக்கங்காட்டியதன் காரணமாக அல்லாஹ் எனக்கு இரக்கங்காட்டினான். என்று அன்னார் கூறினார்.

"எனவே, நாம் எல்லா உயிர்களிடத்திலும் இரக்கங்காட்ட வேண்டும். பூமியிலுள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கங்காட்டுங்கள் வானத்திலுள்ளவன் உங்கள் மீது இரக்கங்காட்டுவான். இது அண்னல் நபி(ஸல்) அவர்களின் அமுத வாக்காகும்."

Post a Comment

0 Comments