மன்னர் கலீஃபா ஹஸரத் உமரே பாரூக் (ரலி) அவர்கள் இரவு நகர் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு ஒழுங்கையினூடாக அவர்கல் செல்கையில் ஒரு குடிசையில் பெண்னொருத்தியின் முனகல் சத்தம் கேட்கிறது. அப்பெண்ணின் கணவனோ வீட்டிற்கு வெளியே கையைப் பிசைந்தவாறு நின்று கொண்டிருக்கிறார்.
கலீஃபா அவர்கள் காரணத்தை வினவவே தனது மனைவி பிரசவ வேதனையால் அவதியுறுவதாகவும் உதவிக்கு பெண் துணை ஒருவருமில்லையெனவும் கூறுகிறார்
அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு உடன் தன் வீடு திரும்பிய கலீஃபா அவர்கள் தன் மனைவியுடன் ஏழையின் வீட்டிற்கு வருகிறார். கலீஃபாவின் மனைவி பிரசவ வேலையைக் கவனிக்கிறார். கலிஃபா அவர்களோ தானே அடுப்பு எரித்து தேவையான வெந்நீரை ஏற்பாடு செய்கிறார்.
அவ்வேளை குழந்தையின் அழும்குரல் கேட்கிறது. கலீஃபாவின் மனைவியார் வெளியே வந்து கலீஃபா அவர்களிடம் விசுவாசிகளின் தலைவரே! உங்கள் நண்பருக்கு ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது என்ற நற்செய்தியை சொல்லுங்கள் என்கிறார்.
தன் மனைவிக்கு பிரசவம் பார்த்தது நாடாளும் கலீஃபா அவர்களின் துணைவியார் என்பதை அறிந்து கொண்ட அந்த ஏழையின் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. கலீஃபா அவர்களின் கையைப் பற்றிப் பிடித்து நன்றி கூறுகிறார்.
மக்களைத் தேடிச் சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்பவரே நல்லாட்சிக்கு உகந்தவர் என அவ்வேழையின் வாய் முணு முனுக்கிறது.
0 Comments