யமாமா நாட்டுத் தலைவர் இஸ்லாமிய போர்வீரர்களோடு போர்தொடுத்து தோல்வி கண்டதால்
முஸ்லிம் படைவீரர்கள் அவரைக் கைது செய்து அண்ணல் நபி(ஸல்) அவர்கள் முன்
நிறுத்தினார்கள். பகைவர்கும் இரக்கம் காட்டும் ஏந்தல் நபிகளார் அவரைத்தன்
விருந்தினராக ஏற்று உபசரித்தார்கள். ஏழ்மையிலே வாழ்ந்த அண்னலார் அவருக்கு எந்தவித
குறைவுமின்றி சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். சில நாட்களின் பின் அவருக்கு
விடுதலை கிடைத்தது. நாயகத்தின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்ட அந்த தலைவர் ஈற்றில்
இஸ்லாத்தினை தழுவினார்.
இறுதியில் தன் நாடு திரும்பிய அத்தலைவர் மக்காவின் குறைஷிக் காஃபிர்கள்
பெருமானார் (ஸல்) அவர்களை இம்சைப்படுத்தி வந்ததால் மக்காவுக்கு வழக்கமாக அனுப்பி
வந்த உணவுப்பொருட்களை இனி அனுப்புவதில்லையென முடிவு செய்தார். மக்காவில் பஞ்சம்
ஏற்படவே மக்காவாசிகள் இது பற்றி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மதீனாவுக்கு தூது
அனுப்பினார்கள்
உடனே பெருமானார்(ஸல்) அவர்கள் யமாமா தலைவருக்கு பின் வருமாரு செய்தி அனுப்பினார்கள்.
“அவர்கள் நமது விரோதிகளாயினும் உணவுப் பொருட்களை அனுப்பாமல் தடை செய்வது குற்றமாகும். நாம் எவரையும் நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தினில் சேர்க்கும் கொள்கை உடையவர்கள் இல்லை. எனவே வழக்கம் போல் உணவுப் பொருட்களை மக்காவுக்கு அனுப்புங்கள்.”
உடனே தலைவர் உணவுப் பொருட்களை மக்காவுக்கு மீண்டும் அனுப்பிவைத்தார்கள்.
0 Comments