புதுச்சட்டை ஆளுநரின் மகளுக்கு இல்லை

ஈராக் நாட்டின் ஆளுநராக கடமைபுரிந்த உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தனது இறுதிமூச்சுவரை எளிமையான வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்
ஒரு பெருநாள் தினம், ஆளுநரின் மனைவி பாத்திமா நம்பிள்ளைகளுக்கு நல்ல நாளிலாவது அணிய புதிய சட்டையில்லை. மற்ற பிள்ளைகள் எல்லாம் அழகாக உடுத்தியிருக்க, ஆளுநரின் மகள் அழுக்கு உடையை அணிவதா? அரச நிதியிலிருந்து முற்பணமாக சிறிது பணம் வாங்கி மகளுக்கு புதுச்சட்டை தைத்துக்கொடுங்கள். என்று தனது கணவனை வேண்டி நின்றார்.
ஆளுநரும் புன்னகைத்தவாராக தன் மனைவியை நோக்கி பாத்திமாவே நான் எனது மாத ஊதியத்தைத் தவிர்த்து வேறு பணத்தை எக்காரணத்தைக் கொண்டும் அரச நிதியிலிருந்து பெற விரும்ம்பவில்லை. ந்நான் எடுத்த பணத்தை திரும்பக் கொடுக்கும் முன் பதவி துறக்கப் படுவேனோ, உயிருடன் இருப்பேனோ என்பதில் என்ன நிச்சயமிருக்கிறது. எனவே எப்படியாவது சமாளித்துக்கொள்ளும் என மனைவியைக் கேட்டுக்கொண்டார்.


மனைவியாரும் தமது வீட்டிலிருந்த பழைய விருப்பொன்றைக் கிழித்து அதில் மகளுக்கு பெருநாள் சட்டை தைத்து கொடுத்தார்கள்.
இஸ்லாமிய நல்லாட்சியாளருள் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் பிரபலமானார்கள். இவர்கள் மரணிக்கும் போது இவர்களிடம் இரண்டே இரண்டு உடைகள் தான் இருந்தனவாம். இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸரத் உமர்(ரலி) அவர்களின் பரம்பரையில் உதித்த இவர்கள் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களால் இரண்டாவது உமர் என வர்ணிக்கப்படுகிறார்கள்.



Post a Comment

0 Comments