ஆடு மேய்க்கும் இடையனிடம் ஒரு சோதனை


கலிஃபா ஹஸரத் உமர்(ரலி) அவர்கள் ஒரு முரை ஓர் அலுவல் காரணமாக காட்டு வழியே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. இடையில் ஒரு மனிதன் ஆடு மெய்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட கலீஃபா உமர்(ரலி) அவர்கள் அந்த மனிதனை அனுகி அன்பரே! எனக்கு இந்த ஆடுகளில் ஒன்றை இனாமாகத் தர முடியுமா என வினவினார்.
ஆட்டிடையன், நண்பரே இது இன்னுடைய ஆடுகளல்ல. ஆட்டுச் சொந்தக்காரனின் அனுமதியில்லாமல் அவ்வறு எனக்குச் செய்ய முடியாது எனக் கூறினார்

கலீஃபா அவர்கள் அம்மனிதனிடம் அப்படியானால் ஒன்று செய். நீ எனக்கு ஒரு ஆட்டைத்தா, சொந்தக்காரன் விசாரித்தால் ஆட்டை ஓநாய் பிடித்துச் சென்றது என்று சொல், அவர் நம்புவார் என்றார்
இடையன் பதில் சொன்னான்:
ஆட்டை ஓநாய் பிடித்துச் சென்றது என்று நான் சொன்னால் எனது எஜமான் நம்புவார். எனினும் எனக்கும் தங்களுக்கும் எஜமானாக இருக்கும் அல்லாஹ் இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கின்றானே? அவனை ஏமாற்ற முடியுமா?

படிப்பு வாசனையே இல்லாத அந்த ஆட்டிடையனின் இறை நம்பிக்கையை அறிந்த கலிஃபா அவர்கள் அவனை அப்படியே ஆரத்தழுவிக் கொண்டார்கள். அன்பரே! உம்மை பரசோதிக்கவே நான் அவ்வாறு உன்னிடம் வினவினேன். உன்மையிலே நீன் இறையச்சம் கொண்ட உத்தமன். என அந்த ஆட்டிடையனை கலீஃபா அவர்கள் வாழ்த்தினார்கள்.

Post a Comment

0 Comments