ஜிப்ரயீல் (அலை) அவர்களின் பத்-துஆ மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஆமீன்

நபி (ஸல்) அவர்கள் ஜும்மா தொழுகையின் போது மிம்பர் படியில் ஏறினார்கள், அப்போது திடீரென முதல் படியில் கால் வைத்த போது ஆமீன் என்று கூறினார்கள்,
     இரண்டாம் படியில் கால் வைத்த போது ஆமீன் என்று கூறினார்கள்,
     மூன்றான் படியில் கால் வைத்த போது ஆமீன் என்று கூறினார்கள்.

     தொழுகை முடிந்த பின் நபி (ஸல்) அவர்கள் இதற்கு பின் வருமாரு விளக்கமளித்தார்கள்:

நான் மிம்பரின் ஏறும் போது வானவர் தலைவை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என் முன்னே தோன்றினார்கள். அவர் மூன்று பத்-துஆ க்களை செய்தார்கள், அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்றார்கள்.

  • முதல் பத்-துஆ: யார் புனித ரமலான் மாதத்தை அடைந்தும் தன்னுடைய பாவங்களுக்காக் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோர வில்லையோ. (தன்னுடைய பாவங்களை நீக்கிக்கொள்ள வில்லையோ) அவர் நாசமடையட்டும்...  ஆமீன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
  • இரண்டாம் பத்-துஆ: யார் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் பெயர் கூற கேட்டும் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாது கூறாமல் இருப்பானோ அவன் நாசமடையட்டும்...  ஆமீன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
மூன்றாம் பத்-துஆ: யார் ஒருவன், தன்னுடைய வயோதிக நிலையை அடைந்த பெற்றோர் தன்னுடன் இருக்க, அவர்களின் மூலமாக [அவர்களுக்கு பனிவிடை செய்வதன் மூலமாக) சுவர்கத்தை அடையவில்லையோ அவன் நாசமடையட்டும்...  ஆமீன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

Post a Comment

0 Comments