இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் ஒரு குழுவினரோடு உறுதி
மொழியளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) எங்களிடம் உறுதிமொழி
வாங்கினார்கள்: "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணை
கற்பிக்கக் கூடாது; நீங்கள் திருடக் கூடாது; நீங்கள் விபசாரம் செய்யக் கூடாது; உங்கள்
குழந்தைகளைக் கொல்லக் கூடாது; நீங்கள் எவரின் மீதும்
அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பக் கூடாது; நல்ல
காரியத்தில் நீங்கள் எனக்கு மாறுசெய்யக் கூடாது. உங்களில் இவற்றையெல்லாம்
நிறைவேற்றுகிறவருக்குப் பிரதிபலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இந்தக்
குற்றங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர்
இம்மையிலேயே தண்டிக்கப்பட்டால், அது அவருக்குப்
பரிகாரமும் (அவரைத்) தூய்மைப்படுத்தக் கூடியதும் ஆகும். அல்லாஹ் எவருடைய குற்றத்தை
மறைத்து விடுகிறானோ அவரின் விவகாரம் அல்லாஹ்விடமே ஒப்படைக்கப்படும். அவன்
நாடினால் அவரை வேதனைப்படுத்துவான். நாடினால் அவருக்கு மன்னிப்பளிப்பான்." @
Sahih al-Bukhari 7468


0 Comments