குழந்தை பிறந்த பிறகு செய்ய வேண்டியவை

 குழந்தை பிறந்த பிறகு செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள் எவை?

1.வலது காதில் பாங்கையும் இடது காதில் இகாமத்தையும் சொல்ல வேண்டும். 

உலகின் நச்சு ஒலிகள் நம் பிள்ளைகளின் காதுகளில் விழுவதற்கு முன் அல்லாஹ்வின் சங்க நாணம் நம் பிள்ளைகளின் காதுகளில் விழ வேண்டும் இந்த செயலை ஆண்கள்,பெண்கள் யார்வேண்டுமானாலும் செய்யாலாம்.

அன்னை ஆயிஷா (ரலி)அவர்கள் யாருக்காவது குழந்தை பிறந்ததை செவியுற்றால் முதலில் அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லிவிட்டு தாயை பற்றியும் குழந்தையை பற்றியும் நலம் விசாரித்து விட்டு குழந்தை அருகில் இருந்தால் அதன் வலது காதில் பாங்கையும் இடது காதில் இகாமத்தையும் சொல்லுவார்கள்.என்று ஹதீஸில் பதிவாகியிருக்கிறது.        

2.தஹ்நீக் செய்ய வேண்டும். 

பெருமானாரின் காலத்தில் பிறந்த குழந்தைகளின் வாயில் பட்ட முதல் உணவு பெருமானாரின் எச்சில் தான்.

ஹழ்ரத் அஸ்மா (ரலி)அவர்களின் மகன் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் பிறந்த போது தன் வாயில் பேரித்தம் பலத்தை வைத்து அதை நன்றாக சவைத்து ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி) வாயில் வைத்தார்கள் என்று ஹழ்ரத் அஸ்மா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எனவே குழந்தைக்கு பெயர் வைக்கும் நேரத்தில் பேரித்தம் பலம் அல்லது தேன் போன்றவற்றை குழந்தையின் வாயில் அப்படியே வைக்காமல் நல்லொழுக்க முல்ல சாலிஹான மனிதர்களின் வாயில் வைத்து சவைத்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

3.நம் குழந்தை சாலிஹான குழந்தையாக ஆகுவதற்கு நல்ல மக்களை அழைத்து விருந்து கொடுத்து துஆ செய்ய சொல்வது. 

இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள் சொல்லும் செய்தி ஹழ்ரத் முஆவியா (ரலி)அவர்களுக்கு இயாஸ் என்று ஒரு குழந்தை பிறந்த போது ஊரிலுள்ள சாலிஹான மக்களை அழைத்து விருந்து அளித்தார்கள் பிறகு அந்த சாலிஹான மக்கள் துஆ செய்தார்கள் அதேபோல தன் பிள்ளைக்காக ஹழ்ரத் முஆவியா (ரலி)அவர்கள் துஆ செய்தார்கள் அந்த துஆக்களின் பிரதிபலனை என் குழந்தையிடத்தில் நான் பார்த்தேன் என்று ஹழ்ரத் முஆவியா (ரலி)அவர்கள் சொல்லும் செய்தியை இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

 

4.அகீகா கொடுக்க வேண்டும். 

ஒவ்வொரு குழந்தையும் அல்லாஹ்விடத்தில் அதன் அகீகாவின் மீது அடமானமாக உள்ளது. நீங்கள் அகீகாவை கொடுத்து அதை மீட்டு கொள்ளுங்கள் என்று பெருமானார் சொன்ன்னார்கள். ஆண்குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளும் பெண்குழந்தையாக இருந்தால் ஒரு ஆடும் கொடுக்க வேண்டும்.

5.குழந்தையின் தலை முடியை களைந்து அதன் இடையளவு தங்கம் அல்லது வெள்ளி நாணயத்தை தர்மம் செய்ய வேண்டும்.

6.குழந்தைகளுக்கு நல்ல அழகான அர்த்தமுள்ள பெயர்களை வைக்கவேண்டும்.

நாளை மஹ்ஷரில் உங்கள் தந்தைகளின் பெயர்களோடு உங்கள் பெயரை இணைத்துதான் உங்களை அழைக்க படும் எனவே அழகான பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு வையுங்கள்  என்று பெருமானார் சொன்ன்னார்கள்.

ஹழ்ரத் தல்ஹா (ரலி)அவர்களுக்கு பிறந்த 8 பிள்ளைகளுக்கும் நபிமார்களின் பெயர்களை வைத்தார்கள்.

ஹழ்ரத் ஜுபைர் (ரலி)அவர்கள் தனக்கு பிறந்த 9 பிள்ளைகளுக்கும் ஷுஹதாக்களின்  பெயர்களை வைத்தார்கள். 

பெயர்களின் பிரதிபலன் நம் பிள்ளைகளின் மீது ஏற்படும் எனவே மாடன் என்று அசிங்கமான பெயர்களை வைக்காமல் நல்ல பெயர்களை வைக்க வேண்டும்.

7.ஆன் குழந்தைகளுக்கு கத்னா (சுன்னத்)விடுவது.

முத்தப உஸ்சுன்னாஹ் என்று பெயர் பெற்ற ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)அவர்கள் தன் மகனார் சாளிமுக்கு கத்னா (சுன்னத்) விடும் போது சாலிஹானவர்களை அழைத்து விருந்து போட்டதாக இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள் அதபுல் முக்ரதில் பதிவு செய்திருக்கிறார்கள்.

குழந்தை பிறந்த ஏழாவது நாள் குழந்தையின் தலைமுடியை களைந்துவிட்டு, குழந்தை அழகான பெயர்வைத்து, அகீகா கொடுத்து, கத்னா செய்ய வேண்டும்.

மார்க்கம் இவை அனைத்தையுமே நமக்கு சொல்லிகொடுத்ருக்கிறது ஆனால் இவைகளை விட்டு விட்டு மார்க்கம் சொல்லி தராத விஷயங்களை நம் விட்டிலுள்ள பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று நாம் குற்றங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

Post a Comment

0 Comments