ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பௌர்ணமி இரவில் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தோம்.
அப்போது அவர்கள் நிலாவை கூர்ந்து பார்த்தபடி, “அறிந்து கொள்ளுங்கள்! இந்த நிலாவை நீங்கள்
“நெரிசல் இல்லாமல்” அல்லது “குழப்பமடையாமல்” காண்பதைப் போன்று உங்கள் இறைவனையும்
நீங்கள்
நிச்சயமாகக் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும், சூரியன்
மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (ஃபஜரிலும் அஸ்ரிலும் உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல்
இருக்க உங்களால் இயலுமானால், அவ்வாறே செய்யுங்கள் (இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்”) என்று
கூறினார்கள்
பின் "சூரியன் உதயமாகும் முன்னரும் மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்" என்ற இறை வசனத்தினை (50:39) ஓதிக்காட்டினார்கள்
புஹாரிபாகம்1; பாடம்:26(தொழுகை நேரங்கள்);ஹதீஸ்:573
0 Comments